NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வினா தாள் லீக் மற்றும் தேர்வுகளில் மோசடி செய்வதை தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வினா தாள் லீக் மற்றும் தேர்வுகளில் மோசடி செய்வதை தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது

    வினா தாள் லீக் மற்றும் தேர்வுகளில் மோசடி செய்வதை தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2024
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    அரசு தேர்வுகளில் நடக்கும் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'மோசடி தடுப்பு' மசோதா, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

    பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா இனி ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு, அது சட்டமாக்கப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.

    போட்டித் தேர்வுகளை நல்லெண்ணத்துடன் எழுதும் மாணவர்கள் (அதாவது, மோசடி செய்வதன் மூலம் தெரிந்தே லாபம் தேடாத தேர்வர்கள்) இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்வுத் தாள்களை கசியவிடுதல், விடைத்தாள்களை சீர்குலைத்தல் போன்ற மோசடிகளை செய்பவர்களுக்கு இந்த மசோதாவின்படி, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும்.

    மக்களவை

    பொதுத் தேர்வுகள் மசோதாவின் விவரங்கள் 

    இந்த மசோதாவின் கீழ் உள்ள அனைத்து குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாதவையாகும். அது போன்ற குற்றங்களை சமரசம் செய்வதன் மூலம் தீர்க்க முடியாது.

    இந்த மசோதாவை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.

    கேள்வி தாளை கசியவிடுவது, தேர்வர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி செய்வது ஆகியவை இதில் குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    பண ஆதாயத்திற்காக போலி இணையதளம் உருவாக்குதல், போலி தேர்வுகளை நடத்துதல், போலி அனுமதி அட்டைகளை வழங்குதல், போலி சலுகை கடிதங்களை வழங்குதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

    இந்த மசோதாவின் கீழ், யாரேனும் வினா தாளைக் கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். 10 லட்சம் வரை அபராதத்துடன் இது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    மக்களவை

    'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றம்
    இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்: காங்கிரஸை வழி நடத்துகிறார் சோனியா காந்தி இந்தியா
    'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு  திமுக
    மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில்  நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025