NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி
    மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி

    எழுதியவர் Sindhuja SM
    May 10, 2023
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் இன்று(மே 10) காலை வாக்களித்தனர்.

    "முதலில், நாம் வாக்களிக்க வேண்டும், அதன் பிறகு தான் இது நல்லது, இது நல்லதல்ல என்று நம்மால் கூற முடியும். நாம் அதைச் செய்யாவிட்டால், அவர்களை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லை" என்று 76 வயதான நாராயண மூர்த்தி இன்று அதிகாலையில் வாக்களித்ததற்கு பிறகு கூறினார்.

    இன்று கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    details

    வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு எடுத்துரைப்பது பெரியவர்களின் கடமை: நாராயண மூர்த்தி

    "தயவுசெய்து எங்களைப் பாருங்கள். நாங்கள் வயதானவர்கள், ஆனால் நாங்கள் 6 மணிக்கு எழுந்து இங்கே வந்து வாக்களித்துள்ளோம். தயவுசெய்து எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். வாக்களிப்பது ஜனநாயகத்தின் புனிதமான பகுதி," என்று பத்ம பூஷண் விருது பெற்ற சுதா மூர்த்தி வாக்களித்ததற்கு பிறகு கூறினார்.

    "நான் எப்போதும் இளைஞர்களிடம் வந்து வாக்களிக்கச் சொல்கிறேன். அதற்கு பிறகு தான் அவர்களுக்கு பேசும் உரிமை இருக்கிறது. வாக்களிக்காமல் பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.

    கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    கர்நாடகா

    கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு

    இந்தியா

    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் நரேந்திர மோடி
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு
    தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை  தமிழ்நாடு
    மே 06-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025