மணல் கொள்ளை வழக்கில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் கைது
மணல் கொள்ளை வழக்கில் லாலு யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் விசாரணை ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின்(ஆர்ஜேடி) முக்கிய தலைவரும், லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளியுமான சுபாஷ் யாதவ், சட்டவிரோத மணல் கொள்ளை நடவடிக்கைகள் தொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தால்(ED) கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்ஜேடி தலைவருடன் தொடர்புடைய எட்டு இடங்களில் ED நடத்திய 14 மணி நேர சோதனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. M/s பிராட்சன் கம்மோடிட்டீஸ் Pvt Ltd(BCPL) என்ற நிறுவனத்தின் மீது பீகார் காவல்துறை 20 FIRகளை பதிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் யாதவ் ஆவார். எனவே, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.