NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி

    லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜேசிஓ) உட்பட ஐந்து இந்திய ராணுவ வீரர்கள், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    அவர்கள் பயணித்த டேங்க் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே அதிகாலை 1:00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

    பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

    பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள், லேயில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்திர் மோர் அருகே போதி ஆற்றைக் கடந்தபோது, ​​அவர்களது டி-72 டேங்கில் எதிர்பாராத விதமாக நீர்மட்டம் உயர்ந்தது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தியா 

    2005 முதல் லடாக்கில் தொடரும் திடீர் வெள்ளங்கள்

    டேங்க்ஸ்டீக்கு அவர்களது டேங்க் சென்று கொண்டிருந்த போது இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது.

    2005 முதல், லடாக் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இந்த திடீர் வெள்ளங்கள், வறண்ட காலநிலை, அதிக உயரம் மற்றும் பாறை நிலப்பரப்பு போன்ற லடாக்கின் தனித்துவமான புவியியல் அம்சங்களால் ஏற்படுகின்றன,.

    இது மேக வெடிப்புகளால் தூண்டப்படும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது.

    2010 ஆம் ஆண்டில், ஆறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 255 பேர் திடீர் வெள்ளத்தால் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லடாக்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    லடாக்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா
    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  டெல்லி
    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு? இந்தியா

    இந்தியா

    இன்று பலியிடப்பட்ட ஆட்டின் மீது 'ராம்' என்று எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை  மும்பை
    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா? மும்பை
    பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025