NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம் 
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்

    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 21, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு சட்டசபையில் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்னும் மசோதா கடும்எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று(ஏப்ரல்.21)நிறைவேற்றப்பட்டது.

    தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தற்போது வரை 8மணிநேரம் என்னும் அளவில் உள்ளது.

    அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8மணிநேரம் மட்டுமே வேலை பார்க்கவேண்டும் என்பதனை மாற்றி இனி 12மணிநேரம் வேலை பார்க்கவேண்டும் என்னும் மசோதா தான் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இச்சட்டத்திற்கான மசோதாவினை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார்.

    அப்போது வேலைநேரம் உயர்த்தப்படுவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

    தொழிலாளர்களுக்கு எதிரான மத்தியஅரசின் இந்த மசோதாவை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது என்று சட்டமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தினார்.

    மசோதா

    4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வழிவகுப்பு 

    அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுத்தலைவர் நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இவர்களை தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் இந்த மசோதாவை ஆய்வுக்குழுவுக்கு அனுப்பி முறைப்படுத்தி சரி செய்யவேண்டும் என விசிக சட்டமன்ற குழுத்தலைவர் சிந்தனை செல்வன் தெரிவித்தார்.

    மேலும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மசோதாவை திரும்ப பெறவேண்டும் என பாஜக குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

    எனினும், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்பதில் மாற்றமில்லை.

    வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைச்செய்ய இந்த மசோதா வழிவகுத்துள்ளது.

    இதனை நடைமுறைப்படுத்துவது அந்தந்த நிறுவனங்களின் விருப்பம் என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கம்யூனிஸ்ட்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு  தொழில்முனைவோர்
    துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து-உயிரிழந்த 2 தமிழர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை

    கம்யூனிஸ்ட்

    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா கேரளா
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா

    இந்தியா

    சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன எலக்ட்ரிக் வாகனங்கள்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  சீனா
    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல் அமெரிக்கா
    கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு  மத்திய பிரதேசம்

    மத்திய அரசு

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு! தொழில்நுட்பம்
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு ஆதார் புதுப்பிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025