NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு 
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 16, 2023
    01:29 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு-கும்பகோணம் மாவட்ட காசிராமன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று இயங்கி வந்தது.

    சம்பவ தினமான கடந்த 2004ம்ஆண்டு ஜூலை 16ம்தேதி ஆடி வெள்ளி என்பதால் அப்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் இருந்த வகுப்பறையினை நன்றாக பூட்டிவிட்டு அருகில் இருந்த கோயிலுக்கு சென்றுள்ளனர்.

    அப்போது அந்த கட்டிடத்தில் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் அறையில் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது.

    பள்ளி கட்டிடம் காற்று வசதியில்லாத குறுகலான பாதைக்கொண்ட கூரையால் வேயப்பட்டிருந்த கட்டிடம் என்பதால் கண்மூடி திறப்பதற்குள் தீ மளமளவென பரவி 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் 19 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கோர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    விபத்து 

    விபத்து நடந்த பள்ளி வாசல் முன்பு டிஜிட்டல் பதாகை 

    அதன்படி இன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டு 19ம் நினைவு நாள் இன்று(ஜூலை.,16) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி, புத்தாடை வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    மேலும் தீ விபத்து ஏற்பட்ட பள்ளியின் முன்பு பெற்றோர்கள் ஏற்பாடு செய்த நினைவஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.

    தொடர்ந்து, பாலக்கரை பகுதியில் உள்ள நினைவு மண்டபத்தில் பல்வேறு தரப்பினரும், பொது மக்களும் தங்கள் அஞ்சலியினை செலுத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகள் புகைப்படம் அடங்கிய டிஜிட்டல் பதாகை ஒன்றும் குறிப்பிட்ட அந்த பள்ளி வாசல் முன்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆடி
    அஞ்சலி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம் ஜெயலலிதா
    தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை திரையரங்குகள்
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை

    ஆடி

    ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?  ட்ரெண்டிங் வீடியோ
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது  கேரளா
    ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை ராமநாதபுரம்

    அஞ்சலி

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு அருணாச்சல பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025