NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி 
    பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி

    பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி 

    எழுதியவர் Nivetha P
    Jul 30, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடிவிபத்து நிகழ்ந்தது.

    இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50,000 பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.

    அதேபோல், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று(ஜூலை.,30) இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    பட்டாசு 

    தமிழக முதல்வர் இது குறித்து தம்மிடம் கேட்டறிந்ததாக அமைச்சர் தகவல் 

    மேலும் அவர்களுக்கு நிவாரண உதவித்தொகையையும் வழங்கினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்று சம்பவயிடத்தில் தடயவியல் நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்தியதில் சிலிண்டர் கசிவின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது" என்று கூறினார்.

    இது எதிர்பாரா விபத்து என்றாலும், மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து, பட்டாசு ஆலைகள் குடியிருப்புப்பகுதிகளில் உள்ளதா?இல்லை புறநகர் பகுதிகளில் செயல்படுகிறதா?என்று ஆய்வு நடத்த வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, தமிழக முதல்வர் இது குறித்து தம்மிடம் கேட்டறிந்ததாகவும், இவ்விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் இனி உரிமம் வழங்கிய பின்னர் பட்டாசு ஆலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தொடர் ஆய்வு செய்வது அவசியம் என வலியுறுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பிரதமர்

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    தமிழ்நாடு

    20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு  அமலாக்க இயக்குநரகம்
    ஜூலை 18, தமிழ்நாடு தினமாக எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா? தமிழ்நாடு செய்தி
    "துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு செய்தி
    அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025