NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொல்கத்தா பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொல்கத்தா பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறை
    கொல்கத்தா மருத்துவர் வழக்கு

    கொல்கத்தா பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறை

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 15, 2024
    08:18 am

    செய்தி முன்னோட்டம்

    அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத் தளத்தையும், காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15), ஊடகங்களின் தவறான பிரச்சாரத்தால் தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

    "இந்த வழக்கில் கொல்கத்தா காவல்துறை எல்லாவற்றையும் செய்துள்ளது. நாங்கள் குடும்பத்தை திருப்திப்படுத்த முயற்சித்தோம், ஆனால் வதந்திகள் பரவுகின்றன.

    ஊடகங்களின் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தால், கொல்கத்தா காவல்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்." என்று அவர் மேலும் கூறினார்.

    மேலும், தங்களை தவறாக சித்தரித்தாலும், குற்றவாளிகள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

    பின்னணி

    நள்ளிரவு வன்முறை சம்பவம்

    அரசு நடத்தும் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கடந்த வாரம் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டது மிகப்பெரிய போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

    இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு கிட்டத்தட்ட 40 பேர் கொண்ட குழு, எதிர்ப்பாளர்கள் போல் மாறுவேடமிட்டு, மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து, சொத்துக்களை சேதப்படுத்தியது.

    மேலும் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் சில போலீசார் காயமடைந்தனர். மேலும், போலீசாரின் சில வாகனங்கள் சேதமடைந்த நிலையில், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலைக் கலைத்தனர்.

    மேலும், சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வெளியே போதுமான எண்ணிக்கையிலான காவலர்களை நியமித்துள்ளதோடு, அதற்கேற்ப நிலைமையைச் சமாளிக்க அறிவுறுத்தியதாகவும் கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    பலாத்காரம்
    இந்தியா

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது விமானம்

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி

    இந்தியா

    இந்தியாவுக்கு அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை அடைய 75 ஆண்டுகள் ஆகும்; உலக வங்கி அறிக்கை உலக வங்கி
    மத்திய அரசின் ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதாவிற்கு எதிர்ப்பு யூடியூபர்
    தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது உத்தரப்பிரதேசம்
    வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் மத்திய அரசு மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025