NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு 
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு

    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு 

    எழுதியவர் Nivetha P
    Apr 26, 2023
    12:20 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம்தேதி கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

    இதில் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலைச்செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தையடுத்து கோத்தகிரி போலீசார் 10 பேரை கைதுச்செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ட்ரைவர் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இதனையடுத்து இந்த வழக்கு சம்பந்தமாக நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து அண்மையில் இந்த கொடநாடு வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது.

    கோவை மாவட்ட சிபிசிஐடி கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    போலீஸ்

    49 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை 

    மேலும் விசாரணை அதிகாரிக்கு கீழ் 49 பேர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், கொடநாடு கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பகுதியில் உள்ள ஜோதிடரையும் விசாரணை செய்யவுள்ளனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன்னர் அந்த ஜோதிடரை சந்தித்துள்ளார்.

    கனகராஜ் இறப்பதற்கு முன்னர் சந்தித்த கடைசி நபர் ஜோதிடர் என்பதன் அடிப்படையிலேயே அவரிடம் விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சிபிசிஐடி

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    தமிழ்நாடு

    சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  சென்னை
    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன? சுற்றுலாத்துறை

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025