NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு 
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு 
    இந்தியா

    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு 

    எழுதியவர் Nivetha P
    April 26, 2023 | 12:20 pm 1 நிமிட வாசிப்பு
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு 
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு

    தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம்தேதி கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதில் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலைச்செய்யப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து கோத்தகிரி போலீசார் 10 பேரை கைதுச்செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ட்ரைவர் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கு சம்பந்தமாக நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அண்மையில் இந்த கொடநாடு வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. கோவை மாவட்ட சிபிசிஐடி கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    49 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை 

    மேலும் விசாரணை அதிகாரிக்கு கீழ் 49 பேர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கொடநாடு கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பகுதியில் உள்ள ஜோதிடரையும் விசாரணை செய்யவுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன்னர் அந்த ஜோதிடரை சந்தித்துள்ளார். கனகராஜ் இறப்பதற்கு முன்னர் சந்தித்த கடைசி நபர் ஜோதிடர் என்பதன் அடிப்படையிலேயே அவரிடம் விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    சிபிசிஐடி

    தமிழ்நாடு

    சில தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு செய்தி
    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  போக்குவரத்து விதிகள்
    அடுத்த சில மணி நேரத்தில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை

    சிபிசிஐடி

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023