NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூருவிற்கு ரகசியமாக வருகை தந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்; என்ன காரணம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூருவிற்கு ரகசியமாக வருகை தந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்; என்ன காரணம்?
    பெங்களூருவிற்கு ரகசியமாக வருகை தந்த பிரிட்டன் மன்னர்

    பெங்களூருவிற்கு ரகசியமாக வருகை தந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்; என்ன காரணம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2024
    12:51 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, புத்தாக்க சிகிச்சைக்காக (wellness treatment) பெங்களூரு வந்துள்ளனர்.

    கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி பெங்களூரு வந்த இந்த அரச தம்பதிகள் வைட்ஃபீல்டில் உள்ள சவுக்யா சர்வதேச சுகாதார மையத்தில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    இது ஒரு தனிப்பட்ட பயணம் என்பதால், அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த வெல்னஸ் மையத்தில் யோகா மற்றும் புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    தம்பதி வாக்கிங் மற்றும் இயற்கை வேளாண்மையிலும், கால்நடை பண்ணைகளிலும் நேரத்தை செலவழிக்கிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    மன்னர் சார்லஸ்க்கு பெங்களூருவில் சிகிச்சை#kingcharles | #QueenCamilla | #healthcentre | #Bengaluruhttps://t.co/y4W3uzOWeZ pic.twitter.com/QquCjwr2im

    — Dinamalar (@dinamalarweb) October 30, 2024

    தகவல்கள்

    மேலும் சில தகவல்கள்

    இந்த வெல்னஸ் மையத்தை டாக்டர் ஜான் மத்தாய் நிறுவியுள்ளார். இதில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

    30 வகையான தெரபிகள் உடல் உபாதைகளை தீர்க்க உதவுகின்றன. மன்னராக சார்லஸ் முதன்முறை இந்த மையத்திற்கு வந்திருந்தாலும், பதவியேற்பதற்கு முன்னர் 9 முறை இங்கு சிகிச்சை பெற்றதாக தகவல் கிடைக்கிறது.

    அதோடு, அவர் இங்கு மூன்று முறை தீபாவளியும், ஒருமுறை பிறந்த நாளும் கொண்டாடியுள்ளார்.

    வயது முதிர்வு பாதிப்புக்கு எதிரான சிகிச்சை மற்றும் புத்தாக்க சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் தம்பதி, இன்றிரவு லண்டனுக்குப் புறப்பட உள்ளனர்.

    மன்னர் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பிலிருந்து சம்பீபத்தில் மீண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன்னர் சார்லஸ்
    பெங்களூர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மன்னர் சார்லஸ்

    பொதுமக்களின் பார்வைக்கு முதன்முறையாக திறக்கப்பட்ட பக்கிங்ஹாம் அரண்மனையின் கிழக்குப் பகுதி  இங்கிலாந்து

    பெங்களூர்

    பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்  குண்டுவெடிப்பு
    பெங்களூரு வீடுகளில் கணினிகளை திருடிய பெண் 24 லேப்டாப்களுடன் சிக்கினார் இந்தியா
    மகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது கோவா
    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது குண்டுவெடிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025