NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி 
    இந்த குண்டுவெடிப்புகளால் 3 பேர் உயிரிழந்தனர்.

    'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 01, 2023
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று தானாக முன்வந்து போலீசில் சரணடைந்த டொமினிக் மார்ட்டினை காவல்துறையினர் "அதி புத்திசாலி" என்று வர்ணித்துள்ளனர்.

    டொமினிக் மார்ட்டின் கேரளாவுக்கு திரும்புவதற்கு முன் வளைகுடாவில் அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் பணிபுரிந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது, வெடிகுண்டு தாக்குதலுக்கான நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த ஒரு கிறிஸ்தவ குழுவின் வழிபாட்டு கூட்டத்தில் திடீரென்று 3 குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டுவெடிப்புகளால் 3 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் வெளியானதும் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    பிவெனி

    மார்டினின் நோக்கம் என்ன என்பதை விசாரித்து வரும் போலீசார் 

    இந்நிலையில், சம்பவம் நடந்த அதே நாள் மாலை கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர், குண்டுவெடிப்புக்கு தானே காரணம் என்று கூறி கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    நேற்று, சிறப்புப் புலனாய்வுக் குழு மார்ட்டினை ஆலுவா அருகே உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றது.

    மார்டினின் வீட்டில் தான் வெடிபொருட்கள் அசெம்பிள் செய்யப்பட்டதாக நம்பப்படுவதால், அவரது வீட்டில் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புலனாய்வுக் குழுவினர் அவரை அங்கு அழைத்து சென்றனர்.

    அங்கு வைத்து, அவர் எப்படி வெடிகுண்டு தாக்குதலை திட்டமிட்டார் என்பதை மார்ட்டின் போலீசாருக்கு விளக்கினார்.

    பிஜேக்

    வழக்கறிஞரின் உதவி தேவையில்லை என்று மறுத்த மார்ட்டின் 

    அவர் ஞாயிற்றுகிழமை சரணடையும் போதே, வெடிகுண்டை உருவாக்குவதற்கு அவர் வாங்கிய பொருட்களின் ரசீதுகளை காவல்துறையில் ஒப்படைத்துவிட்டார்.

    எனினும்,அவருக்கு எதிரான உறுதியான ஆதாரத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், "அதிபுத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சி" கொண்ட நபர் என்று மார்டினை காவல்துறையினர் விவரித்துள்ளனர். எனினும், அவர் அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையை விட்டுவிட்டு எதற்காக இந்தியா திரும்பினார் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எலெக்ட்ரானிக்ஸ் துறையில் அவருக்கு அதிக திறமை இருப்பதால், இந்த வழக்கின் மர்மம் மேலும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில், மார்ட்டின் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    ஆனால், வழக்கறிஞரின் உதவி தனக்கு வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டார். தானே தனக்காக வாதிட்டு கொள்வதாக கூறிய அவர், நிதிபிரச்சனை இருக்கிறதா என்ற கேள்விக்கும் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    குண்டுவெடிப்பு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்

    கேரளா

    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி விபத்து
    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஓணம்

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    காவல்துறை

    லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி  ரஜினிகாந்த்
    சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது ரயில்கள்
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்  தமிழக அரசு
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா
    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  மதுரை
    15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்? டெல்லி
    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி? கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025