NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!

    எழுதியவர் Arul Jothe
    May 17, 2023
    05:00 pm
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!
    செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!

    தமிழகத்தின் கரூர் மாவடத்தில் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி என்பவர் முட்டை வியாபாரம் செய்கிறார். ஒரு மாதம் முன்பு வியாபாரத்திற்கு சென்ற போது மீன் வியாபாரி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையம் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்று 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். 3 மணி நேரத்திற்கும் மேலாக, டவரிலேயே இருந்த செல்வி, குடும்பத்தினர் ஒலிபெருக்கியில் வரச் சொல்லியும் கூட, இறங்கி வர மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறிய பின்னரே கீழே இறங்கி வர சம்மதித்தார்.

    2/2

    தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கபட்டார் 

    பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக இறக்க தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டனர். செல்போன் டவர் மீது ஏறி அவரது இடுப்பில் கயிறு கட்டி கீழே கொண்டு வந்தனர். பாதுகாப்பாக இறக்கப்பட்ட பின், செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக தாந்தோணிமலை கடைவீதி சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் போக்குவரத்து இடையூறுகளும் ஏற்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    காவல்துறை
    காவல்துறை
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    காவல்துறை

    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  இந்தியா
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா

    காவல்துறை

    கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது  கோவை
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்  நாகர்கோவில்
    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை

    தமிழ்நாடு

    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்  மாநில அரசு
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு  சென்னை
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்  திருவண்ணாமலை

    மாவட்ட செய்திகள்

    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு  தமிழ்நாடு
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!  கடலூர்
    வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023