NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு 
    காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 89வது கூட்டம் இன்று நடைபெற்றது.

    காவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 30, 2023
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் நவம்பர் 1 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு(CWRC) இன்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

    காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 89வது கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த அந்த குழு, தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

    அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா 13,000 கன அடி தண்ணீரை(16.90 டி.எம்.சி. வரை) திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.

    ட்ஜ்கவ்க்

    இந்த முறை தண்ணீர் திறந்துவிடப்படுமா?

    ஆனால், காவிரியில் இருந்து திறந்துவிட போதுமான தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு கூறியிருந்தது.

    மேலும், 4 காவிரி நீர்த்தேக்கங்களுக்கும் நீர்வரத்து கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருப்பதால், மாநிலம் அதன் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம்(CWMA) அறிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசு CWRCயிடம் கேட்டுக்கொண்டது.

    இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த காவிரி குழு, இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதேபோல், கடந்த மாதம் 5,000 கன அடி தண்ணீரைத் திறக்குமாறு கர்நாடக அரசிடம் CWRC கேட்டுக்கொண்டது.

    ஆனால், கர்நாடகாவின் காவிரிப் படுகையில் வறட்சியின் தீவிரம் அதிகரித்து வருவதை சுட்டி காட்டிய கர்நாடக-அரசு, நீர்த்தேக்கங்களில் தண்ணீர் அதிகரிக்கும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கர்நாடகா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்  செங்கல்பட்டு
    நாளை 'செல் ஒளிபரப்பு எச்சரிக்கை' சோதனை: பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் சென்னை
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு செய்தி

    கர்நாடகா

    ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்   ராகுல் காந்தி
    கர்நாடக சட்டசபையில் அமளி துமளி: 10 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்  காங்கிரஸ்
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' தெலுங்கானா
    தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்வு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025