NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்வு 
    தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்வு

    தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    Jul 26, 2023
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலம் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அங்குள்ள கபினி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு கபினி, கே.எஸ்.ஆர்.அணைகளிலிருந்து 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது என்று செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், நேற்று(ஜூலை.,25) மதியம் 2 மணியளவில் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வினாடிக்கு 2,000 கனஅடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.

    இதனை தொடர்ந்து இன்று(ஜூலை.,26) காலை 6 மணியளவில் நீர் வரத்து வினாடிக்கு 5,100 கனஅடியாக அதிகரித்த நிலையில், 10.30 மணியளவில் 7,500 கனஅடியாக உயர்ந்தது.

    தற்போது 12,000 கனஅடியாக நீரின் வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

    நீர் வரத்து 

    தொடர்ந்து அதிகரித்து வரும் நீரின் அளவு 

    நீரின்வரத்து அதிகரித்த காரணத்தினால் ஒகேனேக்கல் பகுதியிலுள்ள மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட துவங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தொடர்ந்து, நாளை(ஜூலை.,27)மாலைக்குள் இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து பிலிகுண்டுலுக்கு வரும் நீரின்அளவு 17,000 கனஅடியாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது.

    மழையின் தீவிரம் காரணமாக நீரின் அளவு எவ்வளவு அதிகரிக்கும் என்று சரியாக நிர்ணயிக்க முடியாத பட்சத்தில், ஒக்கனேக்கல், ஊட்டமலை பகுதிகளில் ஆற்றில் குளிக்கையில் கவனத்துடன் குளிக்கவும் என்று ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கர்நாடகா

    கர்நாடக தேர்தல்: ஜனதா தளத்தை தொடர்புகொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக  கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்தியா
    கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்? கர்நாடகா தேர்தல்

    தமிழ்நாடு

    ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா  தமிழக அரசு
    2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு  தமிழகம்
    செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றம்
    இன்று 4 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025