NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் 
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்

    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 18, 2023
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலத்தில் வரும் மே-மாதம் 10ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்த தேர்தலுக்கு பாஜக மாநிலப்பொறுப்பாளாராக தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதன்காரணமாக அண்ணாமலை பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சார வியூகம் என தீவிரமாக பணியாற்றிவருகிறார்.

    இந்த சூழலில் கவுட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சோரகே அண்ணாமலைக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

    அதாவது சமீபத்தில் பாஜக அண்ணாமலை அவர்கள் உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

    அப்போது அண்ணாமலை ஹெலிகாப்டரில் தன்னுடன் கட்டுக்கட்டாக பணத்தினை கொண்டு சென்று உடுப்பி வாக்காளர்களுக்கு அளித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மாவட்டத்தேர்தல் அதிகாரியிடமும் புகாரளித்துள்ளார்.

    இதுபெரும் சர்ச்சையினை கிளப்பியுள்ள நிலையில், அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

    பாஜக 

    உடுப்பி தேர்தல் அதிகாரி தகவல் 

    அதன்படி அவர் கூறியுள்ளதாவது, நான் ஒரு சாமானியன், எங்களின் கொள்கை வேறு.

    நேரம் வீணாவதை தவிர்க்கவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.

    மொத்தம் 5நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதனால் அவசரமாக செல்ல வேண்டியநிலை ஏற்பட்டதால் தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.

    சூல்யா,தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்றுதூரமாக உள்ள இடங்கள்.

    அனைத்து இடங்களுக்கும் சரியான நேரத்திற்கு செல்லவேண்டும் என்பதால் தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.

    நாங்கள் நேர்மையானவர்கள். அவர்களைப்போல் எங்களை நினைத்து, தோல்விபயத்தில் எங்கள்மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் வைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் இதுகுறித்து உடுப்பி தேர்தல்அதிகாரி சீதா கூறுகையில், உடுப்பிக்கு வந்த அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் சில பைகள் இருந்தன.

    அவற்றை அதிகாரிகள் ஆய்வுச்செய்தப்பொழுது தேர்தல்விதிகள் மீறும்வகையில் அதில் ஒன்றுமில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பாஜக
    பாஜக அண்ணாமலை
    தேர்தல்

    சமீபத்திய

    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்

    கர்நாடகா

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் பெங்களூர்
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் காவல்துறை
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் தமிழ்நாடு

    பாஜக

    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    பாஜக ஐ.டி. பிரிவினர் கட்சியில் இருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல் - அதிமுகவில் இணைந்தனர் அதிமுக
    'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி இந்தியா

    பாஜக அண்ணாமலை

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு திமுக
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025