NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு
    சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு ?

    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு

    எழுதியவர் Nivetha P
    Jan 06, 2023
    07:48 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா யாத்திரை'-யில் கமலஹாசனும் அவரது மக்கள் நீதி மய்யக் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

    இதனையடுத்து, இந்த யாத்திரியில் கலந்துகொண்டோருக்கு பாரட்டு தெரிவிக்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடந்தது.

    இதில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கட்சியினர் முன்னிலையில் உரையாற்றினார்.

    அப்போது அவர், 'பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது, அதனை நாம் எதிர்க்க வேண்டும். ஒருபோதும் தமிழகத்தில் மதப்பிரிவினை ஏற்படுத்த முடியாது' என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், 'மத அரசியல் இந்தியாவை சிதைத்து விடாமல் நாம் தடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.

    நீண்ட நாள் விருப்பம்

    சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியுள்ளதாக கமலஹாசன் தகவல்

    ஒற்றுமை நிலைநாட்டும் வண்ணம் ராகுலின் யாத்திரை அமைந்தது என்று இவ்விழாவில் கூறிய கமல், சென்னையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இது தனது நீண்ட நாள் ஆசை என்று கூறிய அவர், அதற்கான அனுமதிகளை கோரியுள்ளதாகவும் கூறினார்.

    அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அதற்கான பணிகளை துவங்க தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.

    ஜல்லிக்கட்டிற்காக சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அங்கேயே இவ்வருடம் ஜல்லிக்கட்டு நடத்தினால் சிறப்பாக நினைவுகூரத்தக்கதாக அமையும் என்றும் அவர் பேசினார்.

    அனுமதி கிடைத்தால் நகரவாசிகளுக்கும் ஜல்லிக்கட்டின் அருமையை எடுத்துரைக்க முடியும் என்பதே அவரின் கூற்றாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமலஹாசன்
    மெரினா கடற்கரை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கமலஹாசன்

    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் விஜய் டிவி
    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் தமிழ் திரைப்படம்

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025