NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்
    இந்தியா

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்
    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023, 06:59 pm 0 நிமிட வாசிப்பு
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்

    தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ள மன்ற துணைத்தலைவர் ஜெய்சங்கர். இவரது மகன் ஜெகன்ஸ்ரீ, அருகிலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த வாரம் முழுவதும் கல்லூரிக்கு போகாதஇவர் நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்கள். அந்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். அப்போது ஜெகனின் மொபைல்போன் எண்ணை வைத்து தேடியதில் அவரது நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அது ஸ்விட்ச்ஆப் செய்த அதே பகுதியில் ஜெகனின் நான்கு நண்பர்களின் போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜெகனின் நெருங்கிய நண்பர்களான ஐயப்பன் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரணைசெய்துள்ளனர்.

    சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்

    அவர்களை பிடித்து விசாரித்ததில் ஜெகனுக்கும் ஐயப்பனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மது அருந்த ஜெகனை அழைத்து கொண்டு இவர்கள் 4 பேரும் கூத்தக்குடி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஜெகனுக்கு போதை அதிகமான பின்னர் மற்ற நான்கு பேரும் சேர்ந்து ஜெகனை மது பாட்டிலை கொண்டு குத்தி கொலை செய்துள்ளார்கள். பின்னர் சடலத்தை வனப்பகுதிலேயே தோண்டி புதைத்ததாக போலீசாரிடம் அந்த நான்கு பேரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் ஐயப்பன் உள்பட 4 பேரையும் மிக தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? இந்தியா
    மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன? வைரல் செய்தி
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் இந்தியா

    மாவட்ட செய்திகள்

    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023