NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்

    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ள மன்ற துணைத்தலைவர் ஜெய்சங்கர்.

    இவரது மகன் ஜெகன்ஸ்ரீ, அருகிலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்துள்ளார்.

    உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த வாரம் முழுவதும் கல்லூரிக்கு போகாதஇவர் நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றுள்ளார்.

    ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்கள்.

    அந்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

    அப்போது ஜெகனின் மொபைல்போன் எண்ணை வைத்து தேடியதில் அவரது நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    அது ஸ்விட்ச்ஆப் செய்த அதே பகுதியில் ஜெகனின் நான்கு நண்பர்களின் போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜெகனின் நெருங்கிய நண்பர்களான ஐயப்பன் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரணைசெய்துள்ளனர்.

    தீவிர விசாரணை

    சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்

    அவர்களை பிடித்து விசாரித்ததில் ஜெகனுக்கும் ஐயப்பனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் மது அருந்த ஜெகனை அழைத்து கொண்டு இவர்கள் 4 பேரும் கூத்தக்குடி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

    அங்கு ஜெகனுக்கு போதை அதிகமான பின்னர் மற்ற நான்கு பேரும் சேர்ந்து ஜெகனை மது பாட்டிலை கொண்டு குத்தி கொலை செய்துள்ளார்கள்.

    பின்னர் சடலத்தை வனப்பகுதிலேயே தோண்டி புதைத்ததாக போலீசாரிடம் அந்த நான்கு பேரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் ஐயப்பன் உள்பட 4 பேரையும் மிக தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு ஈரோடு
    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது மு.க ஸ்டாலின்
    வானிலை அறிக்கை: மார்ச் 22- மார்ச் 26 புதுச்சேரி

    மாவட்ட செய்திகள்

    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள் தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல் திருவண்ணாமலை
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள் கன்னியாகுமரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025