Page Loader
பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு 

பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Mar 26, 2024
01:23 pm

செய்தி முன்னோட்டம்

கவிதாவின் அமலாக்க இயக்குனரக(ED) காவல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்தது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின்(கே.சி.ஆர்) மகளான கே கவிதாவை மேலும் 15 நாட்களுக்கு லாக்-அப்பில் வைக்க அமலாக்க இயக்குநரகம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, டெல்லி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா மார்ச் 23 வரை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) காவலில் இருப்பார் என்று டெல்லி நீதிமன்றம் மார்ச் 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

டெல்லி 

ED காவலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி தொடர்பான மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கே.கவிதா மார்ச் 15 அன்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்க இயக்குநரகம் காவலில் எடுத்தது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தென் மாநிலத்தை சேர்ந்த பிஆர்எஸ் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ED கூறியுள்ளது.