
கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், கே.கவிதாவை 'பாதிக்கப்பட்ட' பெண் என்று அழைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது,
சாட்சிகள் மாற்றி பேச வைப்பதில் கே.கவிதா முக்கியப் பங்காற்றியுள்ளார் என்றும், கோரப்பட்ட ஜாமீன் கிடைத்தால் அவர் தொடர்ந்து அவ்வாறு செய்ய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
"மனுதாரர், கூறப்படும் குற்றங்களைச் செய்ததற்காக பலிகடா ஆக்கப்படக்கூடிய ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்க முடியாது. மாறாக, அவர் சந்தேகத்திற்கு இடமின்றி நன்கு படித்த மற்றும் சமூகத்தில் நல்ல இடத்தில் இருக்கும் பெண்" என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.
டெல்லி
கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்
டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
கவிதாவின் வழக்கமான ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி இதற்கான விசாரணை பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 15ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் வைத்து பணமோசடி வழக்கில் கவிதாவை அமலாக்க இயக்குனரகம்(ED) கைது செய்தது.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, ஆம் ஆத்மி கட்சியுடன் ஊழல் செய்த "சவுத் குரூப்"-ன் முக்கிய உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.