NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்

    கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2024
    07:49 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.

    மேலும், கே.கவிதாவை 'பாதிக்கப்பட்ட' பெண் என்று அழைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது,

    சாட்சிகள் மாற்றி பேச வைப்பதில் கே.கவிதா முக்கியப் பங்காற்றியுள்ளார் என்றும், கோரப்பட்ட ஜாமீன் கிடைத்தால் அவர் தொடர்ந்து அவ்வாறு செய்ய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    "மனுதாரர், கூறப்படும் குற்றங்களைச் செய்ததற்காக பலிகடா ஆக்கப்படக்கூடிய ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்க முடியாது. மாறாக, அவர் சந்தேகத்திற்கு இடமின்றி நன்கு படித்த மற்றும் சமூகத்தில் நல்ல இடத்தில் இருக்கும் பெண்" என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.

    டெல்லி 

    கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம் 

    டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

    கவிதாவின் வழக்கமான ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி இதற்கான விசாரணை பட்டியலிடப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 15ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் வைத்து பணமோசடி வழக்கில் கவிதாவை அமலாக்க இயக்குனரகம்(ED) கைது செய்தது.

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, ஆம் ஆத்மி கட்சியுடன் ஊழல் செய்த "சவுத் குரூப்"-ன் முக்கிய உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    டெல்லி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தெலுங்கானா

    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா எம்பிக்கு கத்தி குத்து  குற்றவியல் நிகழ்வு
    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்
    முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது கைது

    டெல்லி

    பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல் பாஜக
     மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 நிதியுதவியை அறிவித்தது டெல்லி அரசு அரவிந்த் கெஜ்ரிவால்
    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025