NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்

    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023
    10:08 pm

    செய்தி முன்னோட்டம்

    காஷ்மீரில் நார்வால் என்னும் பகுதியில் கடந்த 21ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் சந்தேகத்தின் பேரில், அரசு பணியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    ஆர்ப் என்ற அந்நபர் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    ரியாசி பகுதியில் வசித்து வரும் இவரது மாமா பாகிஸ்தானை சேர்ந்தவராவார்.

    இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவருக்கும் நார்வால் பகுதி குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து அவரிடமிருந்த சென்ட் பாட்டில் வடிவிலான சக்திவாய்ந்த வெடிகுண்டு(ஐ.இ.டி) கைப்பற்றப்பட்டுள்ளது.

    இதுபோன்ற வெடிகுண்டு பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.

    காவல்துறை டிஜிபி

    சென்ட் பாட்டில் வெடிகுண்டு-திறந்தாலோ, அழுத்தினாலோ வெடிகுண்டு வெடித்து விடும் என தகவல்

    இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்ட் வடிவிலான சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    இதனை யாரேனும் திறக்க முயன்றாலோ, அழுத்த முயன்றாலோ வெடிகுண்டு வெடித்துவிடும் என்று கூறினார்.

    மேலும், இதுவரை வெடிக்கக்கூடிய பொருட்கள் கொண்ட ஐ.இ.டி. ஸ்டிக்கி வெடிகுண்டுகள் மற்றும் டைம் பாம்'களையே கைப்பற்றி உள்ளோம்.

    ஆனால், இது சென்ட்பாட்டில் போன்ற உருவத்துடன், உள்ளே வெடிப்பொருட்கள் உள்ளதை முதன்முறையாக காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டை தங்களுடைய சிறப்புப்படையினர் கையாளுவார்கள் என்று கூறிய டிஜிபி, தாங்கள் இதனை தொடக்கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் இது எவ்வளவு தீங்கு தரக்கூடியது என்றும், எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றும் கண்டறியப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025