NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்
    இந்தியா

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்
    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023, 10:08 pm 1 நிமிட வாசிப்பு
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்

    காஷ்மீரில் நார்வால் என்னும் பகுதியில் கடந்த 21ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சந்தேகத்தின் பேரில், அரசு பணியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆர்ப் என்ற அந்நபர் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ரியாசி பகுதியில் வசித்து வரும் இவரது மாமா பாகிஸ்தானை சேர்ந்தவராவார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவருக்கும் நார்வால் பகுதி குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடமிருந்த சென்ட் பாட்டில் வடிவிலான சக்திவாய்ந்த வெடிகுண்டு(ஐ.இ.டி) கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற வெடிகுண்டு பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.

    சென்ட் பாட்டில் வெடிகுண்டு-திறந்தாலோ, அழுத்தினாலோ வெடிகுண்டு வெடித்து விடும் என தகவல்

    இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்ட் வடிவிலான சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனை யாரேனும் திறக்க முயன்றாலோ, அழுத்த முயன்றாலோ வெடிகுண்டு வெடித்துவிடும் என்று கூறினார். மேலும், இதுவரை வெடிக்கக்கூடிய பொருட்கள் கொண்ட ஐ.இ.டி. ஸ்டிக்கி வெடிகுண்டுகள் மற்றும் டைம் பாம்'களையே கைப்பற்றி உள்ளோம். ஆனால், இது சென்ட்பாட்டில் போன்ற உருவத்துடன், உள்ளே வெடிப்பொருட்கள் உள்ளதை முதன்முறையாக காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டை தங்களுடைய சிறப்புப்படையினர் கையாளுவார்கள் என்று கூறிய டிஜிபி, தாங்கள் இதனை தொடக்கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது எவ்வளவு தீங்கு தரக்கூடியது என்றும், எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றும் கண்டறியப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதிகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    ஜம்மு காஷ்மீர்

    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது பிரதமர் மோடி
    பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு இந்தியா
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி

    பயங்கரவாதிகள்

    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023