NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை
    நடந்த சோதனைகளை அடுத்து, பூஞ்ச் ​​பகுதியில் ஒரு பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை

    எழுதியவர் Sindhuja SM
    May 02, 2023
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    2022ல் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) இன்று(மே-2) ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் சோதனை நடத்தியது.

    NIA குழுக்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து, அவந்திபோரா, புல்வாமா, அனந்த்நாக், ஸ்ரீநகர், ஜம்மு, பூஞ்ச் ஆகிய ​​மாவட்டங்களில் சோதனைகளை நடத்தினர் என்று கூறப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் கடந்த வாரம் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதனால், ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், NIA இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    புல்வாமாவின் வஹிபோராவில் உள்ள முகமது யூசுப் வானி மற்றும் பிஜ்பெஹாராவின் சந்த்போரா கனெல்வானில் உள்ள ஃபயாஸ் அகமது சோஃபி ஆகியோரின் வீடுகளில் NIA சோதனை நடத்தியது.

    DETAILS

    பயங்கரவாதத்தை பரப்புவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்

    நடந்த சோதனைகளை அடுத்து, பூஞ்ச் ​​பகுதியில் ஒரு பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், பல மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டது என்று டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்னதாக, பூஞ்ச்-ரஜோரி பகுதியைச் சேர்ந்த குஜ்ஜார் நபரும் அவரது கூட்டாளியும் பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக குல்காம், புல்வாமா, அனந்த்நாக், சோபூர் மற்றும் ஜம்மு மாவட்டங்களில் NIA சோதனை நடத்தியது.

    தடைசெய்யப்பட்ட பல பயங்கரவாத குழுக்களின் பணியாளர்கள், அப்பகுதிகளில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு நாசகார சதித்திட்டங்களை தீட்டுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    மணிப்பூரில் வன்முறை: கூட்டங்களுக்கும் இணையாளத்திற்கும் தடை விதிக்கப்பட்டது  இந்தியா
    ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது  பாரத் ஜோடோ யாத்ரா
    WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது டெல்லி
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  தமிழ்நாடு

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    தீவிரவாதிகள்

    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025