NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில்

    காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 30, 2024
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் அடியாளை நியமித்ததாக தி வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.

    பன்னூனைக் கொல்லும் நடவடிக்கைக்கு அப்போதைய இந்திய உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின்(RAW) தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன, என்று தி வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    "அந்த செய்தியானது தீவிரமான விஷயத்தில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா 

    "ஊகங்கள் மற்றும் பொறுப்பற்ற கருத்துகள் பயனுள்ளதாக இல்லை

    "குற்றவாளிகள், பயங்கரவாதிகளின் நெட்வொர்க்குகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு கவலைகள் குறித்து ஆராய இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் விசாரணை நடந்து வருகிறது" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

    "இது பற்றிய ஊகங்கள் மற்றும் பொறுப்பற்ற கருத்துகள் பயனுள்ளதாக இல்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதிகள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றாலும் அவர்களைத் துரத்துவோம் என்று சமீப காலமாக இந்தியா குறிப்பிட்டு வருகிறது.

    பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயன்றுவிட்டு, எல்லையில் இருந்து தப்பியோடி வருபவர்களை சுட்டுக்கொல்லும் வகையில் பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    அதனால், இந்தியா மீதான குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்

    இந்தியா

    UNSCயின் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு அமெரிக்கா பதில்  எலான் மஸ்க்
    குழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைத்து வருவதாக நெஸ்லே இந்தியா பதில்  நெஸ்லே
    ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார் ஈரான்
    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது  கனடா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்  உலகம்
    அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா அருணாச்சல பிரதேசம்
    மாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா  ரஷ்யா
    காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025