NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு

    இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023
    07:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கடற்படையில் தற்போது 150க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. அதன்படி, 2027ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 200ஆக உயர்த்த மத்திய பாதுகாப்பு துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது.

    அதே போல், கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.

    இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை ஆகும்.

    கடந்த 2005ம் ஆண்டு பிரான்சின் நேவல் க்ரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்தது.

    அதன் படி, கடந்த 2007ம் ஆண்டு மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது.

    இதனையடுத்து, முதல் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017ம்ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

    இன்று இணைக்கப்பட்டது

    அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஐஎன்எஸ் வகிர்

    அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு ஐஎன்எஸ் காந்தேரி, 2021ம் ஆண்டு ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியன அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டது.

    இந்த வரிசையில் தற்போது 5வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் இன்று(ஜன., 23) இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஐஎன்எஸ் வகிர் கப்பலானது 67.5 மீட்டர் நீளமும், 6.2 மீட்டர் அகலமும் கொண்டது.

    இதில் எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கப்பல் கடலுக்கு அடியில் 350 மீட்டர் அடி ஆழம் வரை மூழ்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் இந்த வகிர் கப்பலால் கடலுக்கு அடியில் சுமார் 2 வாரங்கள் வரை தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா ரஷ்யா
    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு மோடி
    மஹாராஷ்டிராவில் புதிய 'பைக் ஆம்புலன்ஸ்' அறிமுகம் இந்தியா
    7 அல்டிமேட் மாடல்களை அறிமுகப்படுத்தும் Harley Davidson! குஷியில் பைக் பிரியர்கள்; ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025