NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் கடற்படைக்கு செக்; அரபிக் கடலில் எம்ஆர் சாம் ஏவுகணையை வீசி இந்திய கடற்படை சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் கடற்படைக்கு செக்; அரபிக் கடலில் எம்ஆர் சாம் ஏவுகணையை வீசி இந்திய கடற்படை சோதனை
    அரபிக் கடலில் எம்ஆர்-சாம் ஏவுகணையை வீசி இந்தியா சோதனை

    பாகிஸ்தான் கடற்படைக்கு செக்; அரபிக் கடலில் எம்ஆர் சாம் ஏவுகணையை வீசி இந்திய கடற்படை சோதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 24, 2025
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், அரபிக் கடலில் நடுத்தர தூர தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை (எம்ஆர்-எஸ்ஏஎம்) அமைப்பின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

    கடலில் இருந்து தாக்கும் பொருளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துல்லியமான தாக்குதல், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.

    குறிப்பாக அதே பிராந்தியத்தில் பாகிஸ்தான் கடற்படை ஏவுகணை சோதனையை திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாக, இந்திய கடற்படை செய்தனை செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக மாறியுள்ளது.

    இந்திய கடற்படை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு மூலம் இதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சாதனையை பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் சுயசார்புக்கு சான்றாக வலியுறுத்தியது.

    ஐஎன்எஸ் சூரத்

    ஐஎன்எஸ் சூரத் சிறப்பம்சங்கள்

    ஐஎன்எஸ் சூரத் திட்டம் 15பி கைடெடு ஏவுகணை அழிப்பு கப்பல் திட்டத்தின் கீழ் நான்காவது மற்றும் இறுதி கப்பலாகும், மேலும் இது 75% உள்நாட்டு பாகங்களைக் கொண்டுள்ளது.

    இந்த போர்க்கப்பல் உலகின் மிகவும் மேம்பட்ட அழிப்புக் கப்பல்களில் ஒன்றாகும், அதிநவீன ஆயுதங்கள், சென்சார் சூட்கள் மற்றும் நெட்வொர்க் மையப்படுத்தப்பட்ட போர் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

    எம்ஆர்-சாம் அமைப்பு, தரையிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை நடுநிலையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இது கடற்படையின் வான் பாதுகாப்பு திறன்களை கணிசமாக வலுப்படுத்துகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடற்படை
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா

    கடற்படை

    சென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்!  போக்குவரத்து விதிகள்
    அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும் அமெரிக்கா
    தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழ்நாடு
    ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம்

    இந்தியா

    குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவனை உரிமம் ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு உச்ச நீதிமன்றம்
    பாதுகாப்பான டிரிஃப்டிங்கிற்கான பயிற்சி அகாடமியை இந்தியாவில் தொடங்குகிறது பிஎம்டபிள்யூ பிஎம்டபிள்யூ
    அசாமில் இனி அனைத்து அதிகாரப்பூர்வ அரசு தொடர்புகளுக்கும் அசாமி மொழி மட்டும்தான்; அரசு உத்தரவு அசாம்
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் அமலாக்கத்துறை

    பாகிஸ்தான்

    சாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை சாம்பியன்ஸ் டிராபி
    ஆப்கானிஸ்தானின் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; பதிலடி தரப்படும் என தாலிபான்கள் சபதம் ஆப்கானிஸ்தான்
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் உயிரிழந்தார் தீவிரவாதிகள்
    மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பாகிஸ்தானில் உள்ள அவரது மூதாதையர் கிராமம் காஹ்வில் இரங்கல் மன்மோகன் சிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025