LOADING...
இந்திய இரயில்வேயில் ஆன்லைன் முன்பதிவுக்கான புதிய விதிமுறை: ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்
அக்டோபர் 1 முதல், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்திய இரயில்வேயில் ஆன்லைன் முன்பதிவுக்கான புதிய விதிமுறை: ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2025
05:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(IRCTC) ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அக்டோபர் 1 முதல், பயணிகள் தங்களது ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிப்படி, IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள், முதல் 15 நிமிடங்களுக்குள் தங்கள் ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும். இந்தச் சரிபார்ப்பு முடிந்த பின்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். முன்னதாக, இந்த விதிமுறை தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு மட்டுமே இருந்தது. தற்போது இந்த விதி அனைத்து வகை ஆன்லைன் முன்பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டிக்கெட் முன்பதிவு நடைமுறைகள் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post