NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்
    தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்

    தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 08, 2023
    03:27 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.54,000 கோடி மதிப்புடைய திட்டங்களில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.

    அதில் ரூ.35,580 கோடி மதிப்பில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். இதற்காக நாகப்பட்டினத்தில் 1,300 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், BS-6 வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றம் டீசல், கூடுதலாக பாலிப்ரொபிலினும் தயாரிக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "இந்தியாவில் தமிழகம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முக்கியமான சந்தையாக விளங்கி வருகிறது." எனத் தெரிவித்திருக்கிறார், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலங்களுக்கான நிர்வாக இயக்குநர் வி.சி.அசோகன்.

    இந்தியன் ஆயில்

    தமிழகத்தில் வேறு என்ன திட்டங்களில் முதலீடு செய்கிறது இந்தியன் ஆயில்? 

    ஆசனூரில் ரூ.466 கோடி மதிப்பில் பெட்ரோல்/டீசல் முனையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், வல்லூரில் ரூ.724 கோடி மதிப்பில் புதிய முனையம் ஒன்றையும், காமராஜர் துறைமுகத்தில் ரூ.921 கோடி மதிப்பில் எரிவாயு முனையும் ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது இந்தியன் ஆயில்.

    மேலும், தமிழகத்தில் புதிய சில்லறை விற்பனை மையங்களை அமைக்கவும், ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் சில்லறை விற்பனை மையங்களை மேம்படுத்தவும், ரூ.2,500 கோடியை ஒதுக்கியிருக்கிறது அந்நிறுவனம்.

    தமிழகத்தில் தற்போது 2,826 சில்லறை விற்பனை மையங்களை வைத்திருக்கும் நிலையில், புதிதாக தமிழகத்தில் 1,775 மையங்களையும், புதுச்சேரியில் 65 மையங்களையும் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது இந்தியன் ஆயில்.

    தற்போது தங்களது சில்லறை விற்பனை மையங்கள் மூலம் தமிழகத்தில் 10% எத்தனால் கலந்த எரிபொருளை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    முதலீடு
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    தமிழ்நாடு

    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு  தேர்தல் ஆணையம்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    இரண்டாவது முறையாக தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தமிழக மகளிர் கால்பந்து அணி கால்பந்து

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்

    வணிகம்

    'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி? இந்திய ரயில்வே
    ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி பங்குச் சந்தை
    ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ விமானம்
    புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 3 தங்கம் வெள்ளி விலை
    கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை கனடா
    பிரபலங்களை வைத்து AI உதவியுடன் உருவாக்கப்பட்டு வைரலான ஸோமாட்டோவின் நகைச்சுவைக் காணொளி  செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025