Page Loader
பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
May 09, 2025
05:44 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் விமானப்படை அதிகாரி வாமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா முறியடித்து வருவதோடு, பாகிஸ்தானிற்குள் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்நிலையில், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

துருக்கி ட்ரோன்கள் 

தாக்குதலுக்கு துருக்கி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் 

கர்னல் சோபியா குரேஷி இதுகுறித்து கூறுகையில், மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்தியாவின் 36 ராணுவ நிலைகளை குறிவைத்து 300-400 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக தெரிவித்தார். எனினும், இவை அனைத்தையும் முறியடித்த இந்தியா பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தது. மேலும், தாக்குதலுக்கு துருக்கியின் அசிஸ்கார்டு சோங்கர் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானிற்குள் நான்கு பாதுகாப்பு தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக விங் கமாண்டர் வாமிகா சிங் கூறினார். மேலும், எல்லையில் துப்பாக்கிச் சூட்டிற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்தியா மீது தாக்கியபோது அதன் சிவில் விமான சேவைகளை நிறுத்தாமல் பொதுமக்களை ஆபத்தில் தள்ளியது என்று கூறி, அதற்கான புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.