NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

    கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2024
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நடைபெறும் போராட்டத்தையொட்டி, மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மார்ச் 21 அன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகம், டிடியு மார்க் மற்றும் ஐடிஓ ஆகிய பகுதிகள் பலத்த கண்காணிப்பில் உள்ளன.

    பாஜக தலைமை அலுவலகம் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், மத்திய டெல்லியில் பல்வேறு இடங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு ED யால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஒரு வாரம் அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி 

    மாபெரும் பேரணியை நடத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு 

    இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தது.

    இந்நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகளும் தற்போது அந்த போராட்டங்களில் இறங்கி உள்ளன.

    முக்கியமான பொது தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் அரசு விசாரணை நிறுவனங்களை பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    கெஜ்ரிவாலின் கைது மற்றும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணி கட்சிகள் வெள்ளிக்கிழமை பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று ஆம் ஆத்மி முன்பு அறிவித்திருந்தது.

    இதற்கிடையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மார்ச் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா அணிவகுப்பை நடத்தப்போவதாக 'இண்டியா' கூட்டணி அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    டெல்லி

    நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை மத்திய அரசு
    டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக
    பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு பஞ்சாப்
    6வது சம்மனையும் புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாக தகவல்  ஆம் ஆத்மி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை டெல்லி
    ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங் டெல்லி
    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம் அமலாக்க இயக்குநரகம்
    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அமலாக்கத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025