
இந்தியாவில் ஒரே நாளில் 10,542 கொரோனா பாதிப்பு: 38 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
நேற்று(ஏப்-18) 7,633ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 10,542ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 63,562ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.14 சதவீதமாகும்.
இதுவரை, இந்தியாவில் 4.48 கோடி(4,48,45,401) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,190 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 38 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணிநேரதத்தில், மகாராஷ்டிராவில் 6 பேர், டெல்லியில் 5 பேர், சத்தீஸ்கரில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர், புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர், கேரளாவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
details
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,42,474 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 8,175 பேர் குணமடைந்துள்ளனர்.
தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 4.39 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 5.1 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.67 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,40,014 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை 220,66,27,758 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 487 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.