NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

    நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 27, 2023
    09:07 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, 'கார்கில் விஜய் திவாஸ்', கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த நாளில், கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, குடியரசு தலைவர், பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங், "கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான வீர மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்" எனக்கூறினார்.

    card 2

    "பொதுமக்கள், நேரடியாக பாதுகாப்புப்படையினருக்கு ஆதரவளிக்க வேண்டும்" 

    தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், " போர் சூழல் ஏற்படும்போதெல்லாம், பொது மக்கள் எப்போதும் படைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் பாதுகாப்புப்படையினருக்கு ஆதரவளிக்க பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும்", எனக்கூறினார்.

    அதுமட்டுமின்றி, "இந்தியா அமைதியை விரும்புவதால்தான், கார்கில் போரில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செல்லவில்லை. எனினும், நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். நாட்டின் மரியாதையையும், கண்ணியத்தையும் காப்பாற்ற ஜம்மு- காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) கடக்கத் தயாராக உள்ளோம்" என்று கூறினார் ராஜ்நாத் சிங்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாதுகாப்பு துறை
    ராஜ்நாத் சிங்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா

    ராஜ்நாத் சிங்

    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா
    பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025