Page Loader
இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள்
கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி நாட்டில் 734 கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள்

எழுதியவர் Sindhuja SM
Mar 16, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

இன்று(மார் 16) புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் 700 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 4,623 ஆக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி நாட்டில் 734 கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்தன. அதன் பிறகு 4 மாதங்களாக கொரோனா பாதிப்புகள் 700ஐ தாண்டவில்லை. கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்தியா

கொரோனா மீட்பு விகிதம் 98.80% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1 இறப்பு பதிவாகியுள்ளது. எனவே, இதுவரை இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,790 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை பதிவான மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 4.46(4,46,92,710) கோடியை எட்டியுள்ளது. செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள், இதுவரை ஏற்பட்ட மொத்த நோய்த்தொற்றுகளில் 0.01% ஆகும். அதே நேரத்தில் தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.80% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது.