Page Loader
உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது
அதிக நோய் பாதிப்பு உள்ள இந்திய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான நகரங்கள் உள்ளன.

உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது

எழுதியவர் Sindhuja SM
May 03, 2023
05:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை ஐந்து மடங்கு அதிகரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை மற்றும் வலுவான சுகாதார வசதிகளை மேம்படுத்தி, புதுமையான சிகிச்சைகளை உருவாக்க, பயோஃபார்மா நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இந்திய வர்த்தக சபை மற்றும் PwC இந்தியாவின் கூட்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை "இந்தியாவில் மருத்துவ பரிசோதனை வாய்ப்புகள்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை புதன்கிழமை பாஸ்டனில் நடைபெறவுள்ள 17வது ஆண்டு பயோஃபார்மா & ஹெல்த்கேர் உச்சிமாநாடு 2023இன் மெய்நிகர் பதிப்பில் வெளியிடப்படும். மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா உருவாகி வருகிறது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

DETAILS

பயோஃபார்மா நிறுவனங்கள் நகரங்களை குறிவைக்க வேண்டும் 

மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதான மற்றும் விரைவான அணுகலை வழங்கி, மிகவும் திறமையான மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு தனியார் துறை,\ பயோஃபார்மா நிறுவனங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. வரும் ஆண்டுகளில் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை ஐந்து மடங்கு அதிகரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றும் இந்த அறிக்கை கூறி இருக்கிறது. அதிக நோய் பாதிப்பு உள்ள இந்திய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான நகரங்கள் உள்ளன. மேலும், இந்த நகரங்களில் மேம்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்களின் இருப்பு உள்ளது. இந்த மாநிலங்களை குறிவைத்து பயோஃபார்மா நிறுவனங்கள் செயல்பட்டால் அவர்களுக்கு நோயாளிகள், தளங்கள் மற்றும் மருத்துவர்கள் எளிதாக கிடைப்பார்கள் என்று இந்த புதிய அறிக்கை கூறியுள்ளது.