NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது
    அதிக நோய் பாதிப்பு உள்ள இந்திய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான நகரங்கள் உள்ளன.

    உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது

    எழுதியவர் Sindhuja SM
    May 03, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை ஐந்து மடங்கு அதிகரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை மற்றும் வலுவான சுகாதார வசதிகளை மேம்படுத்தி, புதுமையான சிகிச்சைகளை உருவாக்க, பயோஃபார்மா நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க இந்திய வர்த்தக சபை மற்றும் PwC இந்தியாவின் கூட்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை "இந்தியாவில் மருத்துவ பரிசோதனை வாய்ப்புகள்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை புதன்கிழமை பாஸ்டனில் நடைபெறவுள்ள 17வது ஆண்டு பயோஃபார்மா & ஹெல்த்கேர் உச்சிமாநாடு 2023இன் மெய்நிகர் பதிப்பில் வெளியிடப்படும்.

    மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா உருவாகி வருகிறது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    DETAILS

    பயோஃபார்மா நிறுவனங்கள் நகரங்களை குறிவைக்க வேண்டும் 

    மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதான மற்றும் விரைவான அணுகலை வழங்கி, மிகவும் திறமையான மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு தனியார் துறை,\ பயோஃபார்மா நிறுவனங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

    வரும் ஆண்டுகளில் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை ஐந்து மடங்கு அதிகரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றும் இந்த அறிக்கை கூறி இருக்கிறது.

    அதிக நோய் பாதிப்பு உள்ள இந்திய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான நகரங்கள் உள்ளன. மேலும், இந்த நகரங்களில் மேம்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்களின் இருப்பு உள்ளது.

    இந்த மாநிலங்களை குறிவைத்து பயோஃபார்மா நிறுவனங்கள் செயல்பட்டால் அவர்களுக்கு நோயாளிகள், தளங்கள் மற்றும் மருத்துவர்கள் எளிதாக கிடைப்பார்கள் என்று இந்த புதிய அறிக்கை கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    இந்தியா

    100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் சென்னை
    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு சூடான்

    அமெரிக்கா

    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம் தமிழ்நாடு
    ஸ்டோர்மி டேனியல்ஸின் அவதூறு வழக்கில் டிரம்ப் சட்ட நிவாரணம் பெற்றார் உலகம்
    600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025