NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது
    'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது

    'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    Sep 20, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு-நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் 'ஐ வின்ஸ்' என்னும் தனியார் உணவகத்தில் 'சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி(14) நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

    அவரைத்தொடர்ந்து அதே உணவகத்தில் அந்த 'சவர்மா'வை சாப்பிட்ட 11 மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 43 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று செய்திகள் வெளியானது.

    இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த உணவகத்திற்க்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கிரில் மற்றும் சவர்மா சிக்கன்களை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

    அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.அருண் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டது.

    கைது 

    தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 35 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் 

    அதன்படி அக்குழுவினர் மாவட்டம் முழுவதுமுள்ள கோழிஇறைச்சிக்கடைகள், மீன் விற்பனைக்கடைகள், உணவகங்கள், துரித உணவகங்கள் என 140 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 37 கடைகளில் தரமற்றவையாக செயல்பட்டு வருவதனை கண்டறிந்து, 82.35கிலோ உணவுப்பொருட்கள் தரமற்றதன் காரணமாக அழிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 35 கடைகளுக்கு டாக்டர் அருண் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதற்கிடையே மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த உணவக உரிமையாளர் நவீன்குமார் மற்றும் சமையல்காரர்கள் 2 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டனர்.

    இதனைத்தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சுகாதாரமற்ற இறைச்சியினை விற்பனை செய்தார் என்று சுகாதாரத்துறை அளித்துள்ள புகாரின்பேரில், நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த இறைச்சிக்கடை உரிமையாளர் சீனிவாசனை காவல்துறை தற்போது கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கைது
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை  எதிர்க்கட்சிகள்
    9 தமிழக மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    கைது

    மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது  மணிப்பூர்
    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை ரஷ்யா
    மணிப்பூர் கலவரம்: 4 பேர் கைது; முதல்வர் பதவி விலக மாட்டார் எனத்தகவல் மணிப்பூர்
    செந்தில் பாலாஜி பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு  அதிமுக

    காவல்துறை

    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் மணிப்பூர்
    மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர்  மணிப்பூர்
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்  கர்நாடகா

    காவல்துறை

    ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் ஹரியானா
    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி
    ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு  ஹரியானா
    நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை  திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025