NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
    'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா

    எழுதியவர் Sindhuja SM
    Sep 19, 2023
    02:38 pm
    'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
    களிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

    மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அறிமுகப்படுத்தப்படும் முதல் மசோதா இதுவாகும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தனது முதல் உரையை ஆற்றிய பிரதமர், இது "வரலாற்று சிறப்புமிக்க அமர்வு" என்று தெரிவித்தார். மேலும், "நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு" அவர் வாழ்த்து தெரிவித்தார். வணிகத்தின் துணைப் பட்டியல் மூலம் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, மாநில மற்றும் தேசிய அளவில் கொள்கை வகுப்பதில் பெண்களின் அதிக பங்களிப்பை இலக்காகக் கொண்டது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    2/2

     2026க்குப் பிறகு தான் இந்த மசோதா சட்டமாக்கப்படும் 

    2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைவதற்கு பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று மசோதாவின் நோக்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நாரி சக்தி வந்தான் ஆதினியம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மசோதா, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. ஆனால், 2026க்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின் நடத்தப்படும் அடுத்த எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகுதான் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். இந்த மசோதாவை சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நாடாளுமன்றம்
    மக்களவை
    பிரதமர் மோடி

    நாடாளுமன்றம்

    பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான புதிய பெயரை அறிவித்தார் பிரதமர் மோடி  புதிய நாடாளுமன்றம்
    'மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது': சோனியா காந்தி  காங்கிரஸ்
    புதிய கட்டிடத்திற்கு மாறிய மக்களவை; இப்போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் நிலைமை என்ன? மக்களவை
    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை  இந்தியா

    மக்களவை

    செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாடாளுமன்றம்
    2024 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு காங்கிரஸ்
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் இந்தியா
    மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது மோடி

    பிரதமர் மோடி

    இன்று மாலை 6.30 மணிக்கு கூடுகிறது முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்றம்
    முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி  இந்தியா
    சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி: நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதாக்களை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி  இந்தியா
    உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023