NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி
    தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி

    தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி

    எழுதியவர் Nivetha P
    Mar 09, 2023
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக இருந்த நிலையில், 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடத்தப்பட்டது.

    இதில் மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வினை எழுதினார்கள்.

    இதனிடையே அரசு பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டில் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனை அமல்படுத்த கால அவகாசம் தேவைப்பட்டதால், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன் பின்னர் பிப்ரவரி 2ம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

    ட்ரெண்டிங் ஹேஷ்டேக்

    தேர்வு நடந்து பல மாதங்கள் ஆனநிலையில் முடிவுகள் வெளியாக காலதாமதம்

    ஆனால் தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

    இதனையடுத்து குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடவேண்டும் என்று பல்வேறு துறைகளில் இருந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், இதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

    எனினும் தற்போதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தேர்வு முடிவுகளை உடனே வெளியிட கோரி, நேற்று(மார்ச்.,8) #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

    இதன் எதிரொலியாக தற்போது மார்ச் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    ட்விட்டர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? திமுக

    ட்விட்டர்

    தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 1 தொழில்நுட்பம்
    தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 2 தொழில்நுட்பம்
    உடல் எடையை குறைத்த நிவின் பாலி - வைரலாகும் இவரின் புகைப்படம் வைரலான ட்வீட்
    இந்தியாவில், ஒரே மாதத்தில், 45,000க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்தது ட்விட்டர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025