NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு 
    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது.

    சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 05, 2023
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த 53 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 28 எம்எல்ஏக்கள் அஜித் பவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவின் மிக முக்கிய எதிர் கட்சியாகும்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத் பவாரும் அஜித் பவாரும் அக்கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் ஆவர்.

    அவர்கள் இருவரும் அரசியல் தலைவர்கள் எனபதையும் தாண்டி மிக நெருங்கிய உறவினர்களும் கூட.

    இந்நிலையில், சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், இரண்டு நாட்களுக்கு முன் திடீரென்று ஆளும் பாஜக அரசுடன் இணைந்தார்.

    இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது.

    ஜேக்சன்க்

    சரத் பவாருக்கு 17 எம்எல்ஏக்கள் ஆதரவு 

    இந்த கிளர்ச்சியை ஏற்படுத்திய அஜித் பவாரை தகுதி நீக்கம் செய்யக் கோரி சரத் பவார் தரப்பினர் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், அக்கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை நிரூபிக்கும் வகையில் அஜித் பவார் இன்று மும்பை பாந்த்ராவில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

    அந்த கூட்டத்தில் குரைந்தது 28 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்கு போட்டியாக சரத் பவாரும் ஒரு கூட்டத்தை நடத்தினார்.

    மும்பை நாரிமன் பாயிண்டில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற்ற சரத் பவாரின் கூட்டத்தில் வெறும் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    எனினும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளில் இருந்து தப்பிக்க அஜித் பாவருக்கு 36க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    பாஜக
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    பாஜக

    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025