NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு
    இந்தியா

    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு

    எழுதியவர் Nivetha P
    March 10, 2023 | 08:24 pm 0 நிமிட வாசிப்பு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக சுற்றுவட்டார கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம்ஆண்டு வரை நடந்தது. தற்போது அதே கிராமங்களில் கூடுதல் இழப்பீடு வழங்குவதாக கூறி மேலும் சில நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனால் முன்னதாக நிலம் வழங்கிய மக்கள் தங்களுக்கும் கூடுதல் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தரப்பணி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கீழ்வளைமாதேவி பகுதியில் 2006ல் கையகப்படுத்திய நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டது. எதிர்ப்பை மீறி நடந்த இப்பணிக்கு காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அன்புமணி ராமதாஸ் அழைப்புக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு

    இதனை தொடர்ந்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்நிலையில் விவசாய நிலத்தினை கட்டுப்பாட்டில் எடுக்க என்.எல்.சி. நிர்வாகம் துடிப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் வரும் சனிக்கிழமை(நாளை) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பிற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கடலூர்
    பாமக

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு

    பாமக

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் மு.க.ஸ்டாலின்
    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை  என்ஐஏ
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  கைது
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023