NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து 
    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து 
    இந்தியா

    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து 

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023 | 01:35 pm 0 நிமிட வாசிப்பு
    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து 
    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக இதில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகையாக தலா ரூ.10லட்சமும், சிகிச்சைப்பெற்று வருவோருக்கு தலா ரூ.50ஆயிரம் வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனிடையே அந்த ரூ.50ஆயிரம் நிவாரண தொகையானது கள்ளச்சாராயத்தினை காய்ச்சிய முக்கியக்குற்றவாளிக்கும் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான அமாவாசை என்பவர் திமுக கவுன்சிலர் நாகப்பன் என்பவரது தம்பி. இவர் தானும் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்தியாவிலேயே ஏன் இந்த உலகத்திலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கிய கோமாளித்தனமான அரசு தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு தான் என்று அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட அமாவாசை சிறையில் அடைப்பு 

    மேலும் இதற்கு ஆதாரமாக எடப்பாடி கே பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றவாளிகள் பெயர் பட்டியலில் 4 பேரில் முதல் நபராக அமாவாசை பெயர் இருப்பதையும், அரசு நிவாரணத்தொகை வழங்கிய பெயர் பட்டியலின் நகலையும் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையான நிலையில் அமாவாசைக்கு தவிர மற்ற அனைவருக்கும் காசோலை வழங்கப்பட்டது. இவருக்கு ஒதுக்கப்பட்ட தொகையானது ரத்து செய்யப்பட்டதோடு, காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த கள்ளச்சாராய வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விழுப்புரம்
    மு.க ஸ்டாலின்
    எடப்பாடி கே பழனிசாமி

    விழுப்புரம்

    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை
    கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு  மு.க ஸ்டாலின்
    கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற முதல்வர் விழுப்புரம் விரைகிறார்  மு.க ஸ்டாலின்
    சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது சென்னை

    மு.க ஸ்டாலின்

    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா
    பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு  திமுக
    தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவியேற்றார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  அமைச்சரவை
    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு  ஆளுநர் மாளிகை

    எடப்பாடி கே பழனிசாமி

    திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு தமிழ்நாடு
    தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து  ஓ.பன்னீர் செல்வம்
    அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி  அமித்ஷா
    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்  தேர்தல் ஆணையம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023