NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்
    பணி நியமனங்களை ரத்து செய்த ஆவின் நிர்வாகம்

    தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    ஆவினில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வு செய்யப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டது.

    இந்த பணிக்கான முறையான தேர்வுகள் நடத்தப்படாமல் வினாத்தாள் வெளியானது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று பல புகார்கள் எழுந்தது.

    இதனை தொடர்ந்து, ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையிலான குழு இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து வந்தது.

    இதனையடுத்து தற்போது இது குறித்த அறிக்கையினை விசாரணை மேற்கொண்ட குழு அளித்துள்ளது.

    அதன்படி, 236 ஊழியர்கள் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

    147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளும் ரத்து

    236 ஊழியர்களை பணி நீக்கம் - பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவு

    இதனை தொடர்ந்து, பணி நியமனம் பெற சிலர் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதன் பேரில், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

    இதில் மதுரை மாவட்டத்தில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற 47 பேரின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளையும் ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    இதனையடுத்து இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025