NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்
    இந்தியா

    தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்

    தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்
    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023, 11:53 am 1 நிமிட வாசிப்பு
    தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்
    பணி நியமனங்களை ரத்து செய்த ஆவின் நிர்வாகம்

    ஆவினில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வு செய்யப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டது. இந்த பணிக்கான முறையான தேர்வுகள் நடத்தப்படாமல் வினாத்தாள் வெளியானது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று பல புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையிலான குழு இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து வந்தது. இதனையடுத்து தற்போது இது குறித்த அறிக்கையினை விசாரணை மேற்கொண்ட குழு அளித்துள்ளது. அதன்படி, 236 ஊழியர்கள் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

    236 ஊழியர்களை பணி நீக்கம் - பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவு

    இதனை தொடர்ந்து, பணி நியமனம் பெற சிலர் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் பேரில், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதில் மதுரை மாவட்டத்தில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற 47 பேரின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளையும் ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் முகமது நபி : ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு டி20 கிரிக்கெட்
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு விமானப்படை
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்! மகளிர் ஐபிஎல்

    தமிழ்நாடு செய்தி

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி
    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் திமுக
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை சென்னை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை விழுப்புரம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023