மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்
இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே இன்று(ஜன 28) விழுந்து நொறுங்கியது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் சுகோய் சு-30 மற்றும் மிராஜ்2000 ஆகியவை அடங்கும் என்று ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த போர் விமானங்களின் மூன்று விமானிகளில் இருவர் பாதுகாப்பாக இருப்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ஒரு விமானி விபத்தில் படுகாயமடைந்துள்ளார். வேறு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் வழக்கமான பயிற்சி பணியில் இருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.