NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்': ஆளுநர் ஆர்.என்.ரவி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்': ஆளுநர் ஆர்.என்.ரவி
    'எண்ணி துணிக' என்ற விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

    'நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்': ஆளுநர் ஆர்.என்.ரவி

    எழுதியவர் Sindhuja SM
    Aug 12, 2023
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஆகஸ்ட் 12) தெரிவித்துள்ளார்.

    2023ஆம் ஆண்டு நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் 'எண்ணி துணிக' என்ற விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

    நீட் தேர்வில் மாநில அளவில் முதல் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    முதலில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சால்வை போர்த்தி கௌரவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதன் பிறகு அவர்களுடன் கலந்துரையாடினர்.

    அப்போது பெற்றோர் ஒருவர், தமிழக அரசு இயற்றி இருக்கும் நீட் விலக்கு மசோதாவில் ஏன் கையெழுத்திடவில்லை என்று ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

    சஜிவுக்

    அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு அனுப்பி இருக்கும் மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்.

    அது மாணவர்களின் போட்டி திறனை கேள்வி குறியாக்கிவிடும்.

    நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு கோச்சிங் சென்று தான் படிக்க வேண்டும் என்பது இல்லை.

    நீட் தேர்வினால் தான் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சாத்தியமாகி இருக்கிறது.

    நீட் தேர்வு குறித்த தவறான புரிதல் தமிழகத்தில் உள்ளது. எந்த மாணவர் இறந்தாலும் அதற்கு நீட் தேர்வு தான் காரணம் என்று இங்கு தவறான பிரச்சாரம் செய்கிறார்கள்.

    இந்தியாவுக்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை. என்று ஆளுநர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆளுநர் மாளிகை
    ஆர்.என்.ரவி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழ்நாடு

    சென்னையில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர்  மு.க ஸ்டாலின்
    கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி, 3 வீடுகள் தரைமட்டம்  தமிழகம்
    தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும்  மு.க ஸ்டாலின்
    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது  பாஜக

    ஆளுநர் மாளிகை

    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆர்ப்பாட்டம்
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு தமிழ்நாடு
    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025