Page Loader
ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது
பாலியல் பலாத்காரம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2024
10:35 am

செய்தி முன்னோட்டம்

ஹைதராபாத்தில் ஒரு பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து தந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரியல் எஸ்டேட் விற்பனையாளரும் அவரது உதவியாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஜனார்த்தன் மற்றும் சங்கா ரெட்டி ஆகியோர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை மியாபூருக்குச் சென்றதாகவும், அங்கு யாதகிரிகுட்டாவில் ஒரு இடத்தைப் பார்வையிடுவதற்காக இரண்டு பேர் தன்னை அழைத்துச் சென்றதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இரவு திரும்பும் போது, ஒரு பாழடைந்த கட்டிடம் அருகே பிரேக் டவுன் ஆனதாக தெரிவித்துள்ளார். அப்போதுதான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அடித்து துன்புறுத்தப்பட்ட பெண்

கார் பழுதானதும், ரியல் எஸ்டேட் விற்பனையாளரும், அவரது உதவியாளரும், அந்த பெண்ணுக்கு உணவு வழங்கினர். எனினும், அவர் அதை மறுத்துவிட்டதால், அதை தொடர்ந்து குளிர்பானம் ஒன்றை அருந்த தந்துள்ளனர். அதில் மயக்கமருந்து கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், அதை குடித்ததும் தான் மயங்கிவிட்டதாகவும், அதை தொடர்ந்து அவர்கள் அவளுக்கு ஏதோ இனிப்பு வழங்கியதாகவும், இருப்பினும் தான் மயக்கத்தில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த பெண்ணை காருக்குள் கடத்தி சென்று, அதிகாலை வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். கூடவே அவர்கள் தன்னை தாக்கியதாகவும் தானும் தாக்கப்பட்டதாகவும், இது கடுமையான உடல் வலிக்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறினார்.