NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'இண்டியா' கூட்டணியை விடுத்து மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ் குமார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இண்டியா' கூட்டணியை விடுத்து மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ் குமார்

    'இண்டியா' கூட்டணியை விடுத்து மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ் குமார்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2024
    01:03 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியுடனான தனது கட்சியின் கூட்டணியை முறித்து கொண்ட நிதிஷ் குமார் இன்று பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    மேலும், அவர் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

    இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தையும் பாஜக மற்றும் ஜே.டி.யு ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    2022 இல் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பிற இடது சாரி கட்சிகளுடன் இணைந்தார்.

    243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது 79 எம்எல்ஏக்களுடன் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், தனித்து ஆட்சி அமைக்க ஆர்ஜேடி கட்சிக்கு மேலும் 43 உறுப்பினர்கள் தேவை.

    ஜபிகோன்வெம்

    பீகாரில் ஆட்சி அமைக்க இருக்கும் பாஜக- ஜேடி(யு)

    எனவே, ஆர்ஜேடி கட்சியின் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஜேடி(யு) கட்சி விலகிவிட்டதால் ஆர்ஜேடியின் கூட்டணி ஆட்சி கலைக்கப்படும்.

    78 எம்எல்ஏக்களின் பலத்துடன் பாஜக பீகாரின் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.

    எனவே, ஜேடி(யு) கட்சி பாஜகவில் இணைந்ததால், இனி பாஜக பீகாரில் ஆட்சி அமைக்கும்.

    ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார்.

    இன்று காலை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற கூட்டத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியை கலைக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    நிதிஷ் குமார்

    சமீபத்திய

    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    பீகார்

    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு - பீகார் முதல்வர் பேட்டி  தேர்தல்

    நிதிஷ் குமார்

    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து பீகார்
    இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  பீகார்
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் பீகார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025