NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ்
    மருத்துவமனையில் இருந்து ஒரு குழு மாதம் இருமுறை சிறைக்கு சென்று கைதிகளை கவனித்து வருகிறது.

    உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி மைய பொறுப்பாளர் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

    சிறையில் HIV வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், HIV-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் டாக்டர் சிங் கூறினார்.

    பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறைக்குள் அமைக்கப்பட்டுள்ள ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    "HIV நோயாளிகளுக்காக ஏஆர்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனது குழு சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது." என்று டாக்டர் சிங் கூறியுள்ளார்.

    இந்தியா

    1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் அந்த சிறைக்குள் உள்ளனர்

    தேசிய AIDS கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

    "தற்போது 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் அந்த சிறைக்குள் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு HIV பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, HIV பாதித்த கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், சிறை நிர்வாகமும் கைதிகளை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறது." என்றும் அந்த மருத்துவர் கூறி இருக்கிறார்.

    மருத்துவமனையில் இருந்து ஒரு குழு மாதம் இருமுறை சிறைக்கு சென்று கைதிகளை பரிசோதித்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    இந்தியா

    7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை கொரோனா
    இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள் கொரோனா
    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் ஆந்திரா
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025