NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி

    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

    எழுதியவர் Nivetha P
    Apr 13, 2023
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களோடு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்துரையாடினார்.

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று(ஏப்ரல்.,13) காலை 'தமிழ்நாடு தரிசனம்' என்னும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களோடு தன்னுடைய இந்த உரையாடலை மேற்கொண்டார்.

    அப்போது அவர், இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்து பேசினார்.

    இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு 3500 ஆண்டுகளுக்கான வரலாறு மட்டுமில்லை அதற்கும் முந்தைய வரலாறு உள்ளது.

    எனவே அத்தகைய பெருமைக்கொண்ட தமிழ் மொழியினை ஆழமாக படித்து தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என்றும் அவர் வலியறுத்தினார்.

    ஆளுநர்

    அனைத்து தரப்பினரும் திருக்குறளை படிக்க வேண்டும் - ஆர்.என்.ரவி 

    மேலும் அவர், பிறமொழி பேசுபவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியினை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்தி மொழியை விட தமிழ் மொழி மிக பழமைவாய்ந்த மொழியாகும்.

    இத்தகைய சிறப்புமிக்க பழமையான மொழியான தமிழ் மொழி மீது இந்தி உள்பட எந்த மொழியினையும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பேசியுள்ளார்.

    தொடர்ந்து அவர், தமிழ் மொழிக்கு நிகரான பழமைவாய்ந்த மொழி என்றால் அது சமஸ்கிரதம் மட்டும் தான்.

    தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையானது.

    அனைத்து தரப்பினரும் திருக்குறளை படிக்க வேண்டும்.

    அதன் ஆழமான கருத்துக்களையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

    திருக்குறள் போல தமிழ் இலக்கியங்கள் ஏராளமாக உள்ளது என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆளுநர் மாளிகை
    ஆர்.என்.ரவி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு மாவட்ட செய்திகள்
    திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள் திருச்சி
    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை சிவகங்கை
    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் தொடர் மழைக்கு வாய்ப்பு புதுச்சேரி

    ஆளுநர் மாளிகை

    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் தமிழ்நாடு

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025