NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு!
    சீனாவில் இதுவரை இல்லாத அளவு கொரோனா அதிகரித்து வருகிறது(படம்: News 18 Tamilnadu)

    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 21, 2022
    03:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.

    பிற உலக நாடுகளான ஜப்பான், சீனா, அமெரிக்கா, பிரேசில், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    இதையடுத்து, கொரோனாவின் பிற வகைகளைக் கண்டறிய பாதிக்கப்பட்டவர்களின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.

    கொரோனா பரவல்

    கொரோனா பரவலுக்கு ஒரு ஆலோசனை!

    உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய கொரோனா தற்போது சீனாவில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்து வருகிறது.

    ஒவ்வொரு நாளும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன வாசிகள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சீனாவில் தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வரலாறு காணாத அளவு சீனாவை வாட்டி வதைக்கும் என்று ஹாங்காங் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

    மேலும், சில உலக நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

    இந்நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பிற அதிகாரிகளுடனும் நிபுணர்களுடனும் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

    தற்போது, கொரோனாவின் தாக்கம் 98% வரை இந்தியாவில் குறைந்திருந்தாலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பதற்காக இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    இந்தியா
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா

    இந்தியா

    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி வைரஸ்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்
    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! உலக செய்திகள்
    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! தமிழ்நாடு

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா
    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025