Loading...
டெல்லியில் தீவிரமடையும் பன்றிக் காய்ச்சல்; மருத்துவர்கள் எச்சரிக்கை
டெல்லி-என்சிஆரில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல்

டெல்லியில் தீவிரமடையும் பன்றிக் காய்ச்சல்; மருத்துவர்கள் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2026
12:07 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் நிலவும் ஈரப்பதமான வானிலை மாற்றம் காரணமாக, எச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் மற்றும் பிற சுவாசப் பாதை நோய்த்தொற்றுகள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. டெல்லி அரசு மருத்துவமனையின் தலைவர் மற்றும் மருத்துவர்கள் உட்படப் பலர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறிகுறிகள்

எச்1என்1 தொற்றின் முதன்மை அறிகுறிகளும் தீவிரமும்

திடீர் காய்ச்சல், வறட்டு இருமல், கடுமையான உடல் வலி, தலைவலி, தொண்டை வலி, குளிர் மற்றும் அதிகப்படியான சோர்வு ஆகியவை எச்1என்1 தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.

தீவிர பாதிப்பு ஏற்படும் போது நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு திடீரெனக் குறையும் அபாயம் உள்ளது.

நெஞ்சு வலி, தொடர் காய்ச்சல், உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அதிக ஆபத்து

அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நலிவடைந்த பிரிவினர்

வயதானவர்கள், சிறிய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த வைரஸ் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய உயர் ஆபத்துப் பிரிவில் உள்ளனர்.

மேலும் நீரிழிவு நோய், நாள்பட்ட இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு எச்1என்1 தொற்று ஏற்பாட்டால் பாதிப்புகள் தீவிரமடையக்கூடும்.

இத்தகைய நோயாளிகள் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் உரிய மருத்துவ சிகிச்சையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.

ADVERTISEMENT

சிகிச்சை முறைகள்

எச்1என்1 காய்ச்சலுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள்

எச்1என்1 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஒசெல்டாமிவிர் போன்ற ஆண்டிவைரல் மருந்துகள் தொடக்க நிலையிலேயே அளிக்கப்படும் போது சிறந்த பலனைத் தருகின்றன.

பன்றிக் காய்ச்சல் என்பது வைரஸ் சார்ந்த தொற்று என்பதால், பாக்டீரியா தொற்றுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சுய மருத்துவத்தைத் தவிர்த்து, தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

வழிகாட்டுதல்

நோய் பரவலைத் தடுக்க நிபுணர்கள் வழங்கும் வழிகாட்டுதல்கள்

டெல்லியில் தொற்று அதிகரித்து வரும் சூழலில், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல், இருமும் போது வாயைப் பொத்திக்கொள்ளுதல் மற்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும், ஆண்டுதோறும் போடும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை செலுத்திக் கொள்வது வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் எனச் சுகாதாரத் துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT