எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் மக்வானா வயது 38. இவரது மனைவி ஹன்சாபென் வயது 35. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் கடந்த ஒரு வருடமாக வீட்டில் மாந்திரீக பூஜை நடத்தி வந்துள்ளனர். கடந்த நாளில் திடீரென இருவரும் தங்களை தாங்களே வெட்டிக்கொண்டு நரபலி கொடுத்துள்ளனர். இதற்காக பிரத்தியேகமான இயந்திரம் தயாரித்து தங்கள் தலை ஹோமகுண்டத்தில் விழும்படி செய்துள்ளனர். தொடர்ந்து, இவர்கள் எழுதிய தற்கொலை கடிதத்தில், பெற்றோரையும் பிள்ளைகளையும் பார்த்து கொள்ளும்படி உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.