NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா
    இந்தியா

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா
    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023, 06:20 pm 1 நிமிட வாசிப்பு
    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா
    ஸ்ரீ நகரில் கொடியேற்றத்துடன் நிறைவுறும் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம்

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 7ம்தேதி துவங்கிய இந்த யாத்திரை 12மாநிலங்கள் உள்பட 2 யூனியன் பிரேதேசங்களில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 19ம்தேதி ஜம்மு&காஷ்மீர் பகுதிக்குள் ராகுல் காந்தி நுழைந்தார். பல முக்கிய பிரமுகர்கள் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். இன்று 130வது நாளாக ராகுலின் யாத்திரை தொடரும் நிலையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெறும் என்பதால் அவருக்கு பெருமளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் 3,970கி.மீ. கடந்து ராகுலின் ஒற்றுமைக்கான யாத்திரை வரும் 30ம்தேதி நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த நிறைவு விழாவில் ராகுல் காந்தி தேசிய கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றவுள்ளார்.

    பிரம்மாண்ட நிறைவு விழா - 23 கட்சிகளுக்கு அழைப்பு

    இந்த நிறைவுவிழாவினை மிக பிரமாண்டமாக கொண்டாட காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஸ்ரீநகரில் ராகுல்காந்தி கொடியேற்றும் அதேசமையத்தில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் தலைவர்கள் காங்கிரஸ் அலுவலகங்களில் கொடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறைவுவிழாவில் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த முக்கிய நபர்கள் அனைவரும் பங்குபெறும் நிலையில், திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 23கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டபொழுது, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இதனால் அவர்களையும் இந்த விழாவிற்கு அழைத்துள்ளார்கள். தொடர்ந்து, நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் மிகதீவிரமாக செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023