NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி 
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது - க்ரைம் ஸ்டோரி

    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி 

    எழுதியவர் Nivetha P
    Aug 13, 2023
    07:51 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி:சேலம்-மேட்டூர் பகுதியினையடுத்த கருங்கல்லூர் அரசு ஊராட்சி துவக்கப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 144மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    அதன்படி இப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிப்புரியும் ராஜா, அப்பள்ளியில் பயிலும் மாணவிகள், குறிப்பாக 5ம்வகுப்பு படிக்கும் மாணவிகளை தனது அறைக்கு தனிமையில் அழைத்து தினமும் கை-கால்களை அழுத்துமாறும், தலைக்கு மசாஜ் செய்யுமாறும்கூறி தொந்தரவு செய்ததோடு பாலியல் ரீதியாகவும் அத்துமீறியுள்ளார்.

    இதனால் பாதிப்படைந்த மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து கடந்த 10ம்தேதி அப்பள்ளியினை முற்றுகையிட்ட பெற்றோர் தலைமை ஆசிரியரை எதிர்த்து முழக்கங்களும் எழுப்பியுள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியர் தணிகாச்சலம், வட்டாட்சியர் முத்துராஜா, வட்டாரக்கல்வி அலுவலர் சின்னராசு உள்ளிட்டோர் நேரில்வந்து பெற்றோரை சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

    க்ரைம் 

    பள்ளி ஆசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் 

    எனினும், பெற்றோர்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் மேட்டூர்-மைசூரு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜாவை பெற்றோர்கள் கற்கள், செருப்பு கொண்டு தாக்க சென்ற நிலையில், காவல்துறை அவரை தனியறையில் வைத்து பூட்டியுள்ளனர்.

    பின்னர் காவல்துறை மற்றும் உயரதிகாரிகள் இணைந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றம் செய்தவர் யாரானாலும் தண்டனையளிக்கப்படும் என்று உறுதியளித்ததாக தெரிகிறது.

    அதன் பின்னரே அங்கிருந்து பெற்றோர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து, மேட்டூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக ராஜா அழைத்துச்செல்லப்பட்டார்,

    அப்போது மாணவிகள் மட்டுமின்றி சில ஆசிரியைகளுக்கும் ராஜா பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் பெற்றோர்களை அளித்த புகார்களின் பேரில் ராஜா தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    க்ரைம் ஸ்டோரி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா

    காவல்துறை

    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  கைது
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி  கைது

    காவல்துறை

    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து  காவல்துறை
    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  காவல்துறை
    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் பெங்களூர்
    காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது  மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025